![]() ஓலமடங்கிய வெளிகளில் உச்சஸ்தாயியில் அலறுகின்றன பறவைகள் குளிர் இரவுகளில் மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற மிருதுவான உன் உடலை, என்னைப் போர்த்தும் விரல்களை கதகதப்பான வார்த்தைகளை தேடித் தேடி சலிப்புறுகிறது மனசு எங்கு போயினும் எல்லா வீடுகளிலும் எல்லா இருக்கைகளிலும் பெருக்கெடுத்து உடைகிறது உன் நினைவு இருட்டு வெளிகளில் தனிமையின் தவிப்பை இருளின் பயத்தை விரட்ட விரும்பி உரத்துச் சொல்கிறேன் உனது பெயரை நீ வேண்டும் என் எல்லாத் தோல்விகளிலும் எல்லாத் துன்பத்திலும் என்னை திட்டித் தீர்க்க எனினும் நீ என்னுடன் இருக்க வேண்டும் ~ sketch from |
Previous Posts
- ஓலமடங்கிய வெளிகளில் உச்சஸ்தாயியில...
- உதடுகளை அறுத்தெறிந்தேன் முத்தங்கள் என்னை தொந்தரவு...
- தொலைவில் கேட்கும் உன் குரலை என் வீட்டுச் சாளரங்கள...
- நன்றி நீண்டு கொண்டிருக்கிறது ஒற்றையடிப்பாதை தீர...
- 'பிள்ளை கெடுத்தாள் விளை'
- கனிமொழி வெறும் கவிஞை மட்டுமே
- 'கற்பை' அழித்தல்
- Profile 1: அம்பை (1970-)
- வெங்கட் சாமிநாதன் - சில அதிர்வுகள்
- அறிமுகம்