11/17/2004

தான்யாவின் கட்டுரை தொடர்பான சில கருத்துக்கள்!

செல்வி .வ. உருத்திரா
(மட்டக்களப்பு, இலங்கை)


தினக்குரல் ஜுன்13 |பனுவலில்| இரவில் சலனமற்றுக் கரையும் மனிதா;கள் எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக் இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது |பெண்| சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் |பெண்| போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.

அரசுசார்பற்ற தொண்டு நிறுவனமான சூ¡¢யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் (இல.20 டயஸ் லேன் மட்டக்களப்பபு ) ஒரு வெளியீடாகவே |பெண்| சஞ்சிகை வெளிவருகின்றது. இதற்கு இந்நிறுவனத்தின் வெளியீட்டுப்பி¡¢வு இணைப்பாளர் சே.விஜயலட்சுமி பொறுப்பாக உள்ளார். இவருக்கு முன்னைய காலங்களில் இணைப்புக்குழு உறுப்பினர்களிலிருந்து ஒவ்வொருவராக தொகுத்தளிக்கும் பொறுப்பை ஏற்று |பெண்| வெளிக்கொணரப்பட்டது. இதனடிப்படையிலேயே பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் |பெண்| சஞ்சிகையின் இதழ்களான 2.2 4.1 5.2 6.2 ஆகியவற்றுக்கு ஆசி¡¢யராக இருந்துள்ளார் அன்றி |பெண்| சஞ்சிகை என்பது பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுருவினது தனிப்பட்ட வெளியீடுகள் அல்ல. தான்யா இது பற்றி போதிய விளக்கமின்றியே அக்குறிப்பினை வரைந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

சித்ரலேகா அவர்கள் |சொல்|லாத சேதிகள்| |சிவரமணி கவிதைகள்| ஆகிய இரு நூல்களையும் பதிப்பித்துள்ளார் |சொல்லாத சேதிகள்| கவிதைகளில் சிவரமணியின் இரு கவிதைகள் உள்ளன. அவ்விரு கவிதைகளும் இந்நுரலிலேயே முதல் முதல் பிரசுரமாயுள்ளன. |வையகத்தை வெற்றி கொள்ள| என்ற கவிதையும் ஒன்று. அது சிவரமணியினுடையது. |பறத்தல் அதன் சுதந்திரத்தில்| சன்மார்க்காவின் பெயா¢ல் பிரசுரமாயுள்ளது. இத்தவறுக்கு |பறத்தல் அதன் சுதந்திரத்தின|; ஆசி¡¢யர்களே பொறுப்பு அன்றி சித்ரலேகா அல்ல. அவ்வப்போது போதிய தேடலின்றி அஜாக்கிரதையாக பதிப்பாளர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒருவரை பாத்திரமாக்குவது எந்த வகையிலும் தா;மமாகாது.

செல்வி சிவரமணி கவிதைகளில் (தாமைரைச் செல்வி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.) தான்யா குறிப்பிட்ட கவிதை பற்றிய போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாமரைச்செல்வி பதிப்பகத்தின் வெளியீடு குறித்து தான்யா எழுதும் போது அதனைப் புரட்டிப் பார்த்தாவது எழுதியிருக்கலாம். இல்லையேல் சித்ரலேகா மெளனகுருவினால் |செல்வி சிவரமணி கவிதைகள்| தொகுப்பில் :;சிவரமணியின் வாழ்வும் கவிதையும|; பற்றிய ஓர் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அதில் சிவரமணியினால் நேரடியாக தரப்பட்ட கவிதைகள் எவை? வேறு சஞ்சிகைகளில் பிரசுரமாகியவை எவை? என்பன போன்ற வி¡¢வான குறிப்புக்கள் காணப்படுகின்றன.

அவ்வாறு இருந்தும் பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுரு தெளிவு படுத்த வேண்டும் என தான்யா குறிப்பிட்டிருப்பது எதனை என்பது எமக்குத் தெளிவாகவில்லை. ஆது மட்டுமன்றி சித்ரலேகா மெளனகுரு பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு உடையவர். அவ்வாறு இருந்தும் இத்தகைய பெயர் மாறாட்டங்களில் அஜாக்கிரதை உடையவர் என தான்யா குறிப்பிடுவதன் அடிப்படை எது என்பதை தான்யாவே எமக்கு தெளிவு படுத்த வேண்டும்.

அது மட்டுமன்றி சிவரமணியின் கவிதைகளில் |பெண்| சஞ்சிகைகளில் வெளிவந்தது தொகுதி 2 இலக்கம் 2 இல்;உள்ள ஒரு கவிதையே. தான்யா குறிப்பிடும் அஜாக்கிரதையான அளவிற்கு |பெண்| சஞ்சிகையில் எத்தனை கவிதைகள் சிவரமணியினுடையது வெளிவந்தன என்பது தான்யாவுக்கே வெளிச்சம்.

ஆனால் சிவரமணியின் கவிதை வா¢களில் ஒன்றான |தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளளேன்| என்பதை மகுட வாசகமாக கொண்டே (முன்அட்டை) |பெண|; சஞ்சிகை வெளிவருகின்றது இதில் மறுப்பேதும் இல்லை. இதனையே தான்யா அவர்கள் |கண்டெடுத்தேன்|, |கண்டெடுத்தேன்| என சித்திரலேகா மெளனகுரு அவர்கள் குறிப்பிடுவதாக அர்த்தப்படுத்தி எழுதியிருக்கலாம். தான்யா அவர்கள் குறிப்பிடும் கண்டெடுத்துப் போடும்படியான சிவரமணியின் கவிதைகள் எத்தனை |பெண்| சஞசிகையில் வெளிவந்தது என்பது தான்யாதான் வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் எழுத்துலகில் பெண்கள் எழுதுதல்; என்பதே ஓர் குறிப்பிடத்தக்க விடயம். ஆண்கள் தங்கள் இலக்கிய இருப்புக்களை உறுதிப்படுத்த எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள் நேர ஒதுக்கீடு, வாசிப்பு (குடும்ப பொறுப்பு இல்லாது) .போன்ற முயற்சிகளின் காற்பங்கு கூட எழுதிய எழுதி வந்த எழுதப் பழகி விட்டுவிட்ட பெண் எழுத்தாளர்கள் குடும்பத்துள் நுழைந்ததும் முன்னெடுப்பதில்லை. முன்னெடுத்த ஓர் சிலர் தவிர மூத்த பெண் எழுத்தாளர்களில் (தற்போது எழுதுவதைக்;குறைத்துக் கொண்ட) அனேகா; குடும்பத்துள் வேறு வடிவங்களில் தாயாய், மனைவியாய், தொழில் நிலையத்து பணியாளராய் தங்களை பங்கிட்டுள்ளனர் .இத்தகைய தம் நிலைகளை முறியடித்து எழுத வந்துள்ள பின்னர் பெண்கள் எதி;ர்கொள்ளும் பிரச்சனைகள் பல...

தான்யா குறிப்பிட்டு குறை கூறும் பட்டியலிடல் அக்கறையீனம் என்பனவற்றை ஒரு பொருட்டாக நாம் கருதி கருத்துக்கள் எழுதும் காலம் அல்ல இது. பெண்களுக்கெதிரான வன்முறைகளும் அநீதிகளும் மிகுந்த பகுத்தறிவான அறிவியல் யுகத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொத்த இலக்கிய சூழலிலும் கூட குழுநிலை வாதம் இருக்கிறது. புதிதாய் ஓர் சிற்றிதழாவது வந்து விட்டால்- புதுக்கவிதை மாதி¡¢ பெயர்களையும் வா¢சைப்படுத்தியிருப்பார்கள.; எத்தனை சிற்றிதழ்கள் வெளிவருகின்றதோ அத்தனையிலும் அப்பட்டியிடல் இருக்கும்.

அவர்களின் கொள்கைகளையும் ஒருவர் மற்றொருவா¢ன் படைப்புக்களையும் மாறி மாறி விமர்சனம் செய்வதையும் வைத்துக் கொண்டே சில சிற்றிதழ்களை வருடக்கணக்கில் நகா;திச் செல்லக் கூடிய நிலமை வருமளவிற்கு இன்றைய படைப்டபுலகம் (அனேகமாக ஆண்களை கொண்டிருப்பவைதான்.) காணப்படுகிறது.

ஆபூர்வமாக ஆண்களுக்கு நிகரான (தங்களை அத்துறைகளில் நிபுணர்களாக கருதும் அளவில் உள்ளவர்களுக்கு) எழுத்துக்களோடு வெளிவரும்போது சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்திரி கவிதைகளுக்கு வரும் |பெண் மொழி| தொடர்பான எதிர்ப்புக்கள் போல் எதையாவது எழுதிக்கிழித்து விவாதித்து குப்பையாக்கி தங்களுக்கு (குழுக்கொள்கை வாதங்களுக்கு) புறம்பானதாக ஆக்கி ஒதுக்கிவிடும் மனோபாவம்தான் படைப்புலகில் இன்னும் நிலைபெற்றுள்ளது.


தமிழ்நாட்டை பொறுத்தவரை புனிதமானதாகருதப்படும்; இறைபாடல்களில் கூட (சித்தா; பாடல்களில்) இல்லாத பதப்பிரயோகங்களா? முகம் சுளிக்கும் பெண் உறுப்புக் குறியீடுகள் எத்தனை ? எத்தனை ? இவற்றை எல்லாம் இந்தியா டுடேயில் எழுதியவர்கள் |பக்திப்பெருக்கோடு| நோக்கினார்களா? அப்படி நோக்கியதனால் தானோ யோனி, முலைகள், போன்ற பதங்ளை ஆபாசமாக விரசமாக ஆண் கவிஞர்களுக்கும் ( மூத்த கவிஞர் அப்துல் ரஹ்மானுக்கு கூட) அருவருப்பாக சமூகச் சீரழிவாக தோன்றியிக்கிறது.?

எனவே பெண்களுக்கெதிரான வன்முறைக் கலாசாரத்தை சமூகத்தில் ஒரு சாரார் ஏதோ சொல்லி நியாயப்படுத்தவது போல் பெண்களின் எழுத்து மொழிக்கெதிரான வன்முறைகள் தலை தூக்கி உள்ளதையே தான்யா போன்றோ¡¢ன் இத்தகைய விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றன.

எனவே |பனுவலை| பொறுத்தவரை பெண்களின்; படைப்புக்கள் தொடர்பான விமர்சனத்தையோ அறிமுகத்தையோ தருவது மிகச் சொற்பமாக உள்ள நிலையில் தான்யா போன்றோரது தொடர்பற்ற விதத்தில் அமைந்துள்ள நோக்குகள் குறிப்புக்கள் ஆரோக்கியமானவை அல்ல என்பதோ¡டு |பனுவல்| இன்னும் அதிகமான யதார்த்த நிலை இலக்கிய நிகழ்வுகளையும் அதிலும் குறிப்பாக பெண்கள் படைப்புக்கள் தொடர்பான ஆக்கங்களை பக்கச்சார்பற்று அதிகா¢க்க வேண்டும் என்பதையும்இப்படியான விமர்சகர்களுக்கு வேண்டுகோளாக முன் வைக்கின்றேன்.

http://www.geotamil.com/pathivukal/uruthiraontanja_august2004.html

Comments on "தான்யாவின் கட்டுரை தொடர்பான சில கருத்துக்கள்! "

 

post a comment